2025 ஜூன் 11, புதன்கிழமை

ஒரு வாரத்துக்கு சபை மூடப்படும்

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாத சபையமர்வுகளை, ஒருவாரத்துக்கு ஒத்திவைப்பதற்கு கட்சித் தலைவர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபையில், தொழிற்நுட்ப கட்டமைப்பு தொகுதியை மறுசீரமைக்கும் நடவடிக்கைக்காகவே, சபையமர்வு ஒருவார காலத்துக்கு ஒத்திவைக்கப்படவுள்ளது.

ஒலி அமைப்பு , மின்னணு வாக்கு முறைமை, எலக்ட்ரிக் ஒலிவாங்கிகள் ஆகியவற்றை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளுக்காகவே சபையமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையிலும் இடம்பெறவிருந்த சபையமர்வுகள் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையிலும் நடத்தப்படும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டமைப்பை செய்வதற்கு 17 நாட்கள் தேவைப்படும் என்றும், எனினும், ஒருவாரத்துக்கு மட்டுமே சபையமர்வுகளை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் புதிய தொகுதி அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10