2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஒரே நிறுவனத்தின் ஊழியர்கள் ஐவர் விபத்தில் பலி

Editorial   / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின், அலவ்வ  10 ஆவது மைல்கல் பகுதியில் இன்று ​அதிகாலை இடம்பெற்றிருந்த விபத்தொன்றில் ஐவர் பலியாகியிருந்தனர்.

கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த காரொன்றும்,  குருநாகலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த டிபர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் காரில் ​பயணித்த ஐவரே உயிரிழந்துள்ளதாகவும், அவர்கள் வரகாபொல பிர​தேசத்துக்கு மரண வீடொன்றுக்கு சென்று திரும்பி வந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளனர் என்றும்,  இவர்கள் ​ஐவரும் கட்டட நிர்மாண நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .