2025 ஜூன் 25, புதன்கிழமை

ஒலிரூட் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2019 மே 25 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆ.ரமேஸ்,  எஸ்.கௌசி

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிரூட் பகுதியில் இருந்து, ஆணொருவரின் சடலத்தை, தலவாக்கலை பொலிஸார், இன்று (25) காலை மீட்டுள்ளனர்.

ஒலிரூட் கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த பெணடிக் பிரசாந் (வயது 23) என்ற இளைஞரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டள்ளார்.

இவர், தோட்ட ​தேயிலைத் தொழிற்சாலையில், இரவு நேர தொழிலுக்குச் சென்றிருந்தார் என்றும் எனினும், காலை வரை, வீடுதிரும்பியிருக்கவில்லை என்றும் பின்னர், தலையில் பலத்த காயங்களுடன், சடலமொன்று கிடப்பதாக, பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே, சடலம் மீட்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கொலை செய்யப்பட்டாரா இல்லை தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .