2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘ ஒழுக்கம் காணப்பட வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 24 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் ஒழுக்கம் நாட்டுக்குள் காணப்பட வேண்டுமென, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டி- கெட்டம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாதுகாப்பு இல்லையென்றால், ஏனைய அனைத்தும் சீர்குலையும்  எனத் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக இல்லாமல் இருந்த பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்பி, பயமின்றி வாழ்வதற்கான யுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் தான் எனத் தெரிவித்துள்ள அவர், தான் யுத்தத்தை வெற்றிக்கொள்வேன் என மக்கள் தன்மீது நம்பிக்கை வைத்துள்ளனரென்றும் தெரிவித்துள்ளார்.

இன்று நிலையற்ற அரசாங்கம் ஒன்று உள்ளதென்றும் ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு திசையில் நிற்கும் போது, மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகுமென்றும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .