2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கொட்டதெனியாவ மாணவன் மீண்டும் கைது

Kanagaraj   / 2016 மார்ச் 13 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டதெனியாவ சிறுமியான சேயா சந்தவமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி, படுகொலைச்செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட மாணவன், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோய்ன் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 62 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் திவுலப்பிட்டிய, படல்கம, ஹுனுமுல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரும் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு 15ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X