2025 ஜூன் 09, திங்கட்கிழமை

காணமல் போனோர் அலுவலகம் நல்லிணக்கத்துக்கான படிக்கல்லாகும்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை வரவேற்கத்தக்கதாகும் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சி.வை.பி.ராம், இது நல்லிணக்கத்துக்கான படிக்கல்லாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இலங்கைத் தீவில் பல்வேறு பட்ட தருணங்கள் பல பொதுமக்கள் காணமல் போயுள்ளனர். இனக்கலவரங்களின்போதும் யுத்த சூழலின்போதும் அதற்கு பின்னரான கொடுங்கோல் ஆட்சியாளர் காலத்திலும் இவ்வாறான காணமல்போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது வரையில் காணமல்போனவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியாது. என்றோ ஒருநாள் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அன்றாட வாழ்க்கையை மிகுந்த வேதனையுடன் ஒவ்வொரு உறவுகளும் நடத்துகின்றன.

ஆகவே, மனித உணர்வுடன் மிகவும் தொடர்புடைய இந்த விடயத்தில் எந்த தரப்பாக இருந்தாலும் இன, மத, குல பேதமின்றி உண்மைகள் கண்டறியப்பட்டு நியாயம் நீதி கிடைக்க வேண்டியது அவசியமாகின்றது.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைய பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அத்தீர்மானத்தின் அடிப்படையிலும் உண்மைகள் கண்டறியப்படவேண்டியதன் அவசியத்தையும் புரிந்துகொண்டு அரசாங்கம்  காணமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது.

அதனை வரவேற்பதோடு இந்த நாட்டில் தேசிய இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டு நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதற்கான முதற்படியாகும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

1 hours ago - 0     - 2

‘படை தலைவன்’

1 hours ago - 0     - 4

மன்னிப்பு

1 hours ago - 0     - 2

‘மெஜந்தா’

1 hours ago - 0     - 2