2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கார் விபத்து; சாரதி உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  காலி - மாத்தறை பிரதான வீதியில் கார் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை (26) அதிகாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதியையும் வெளிநாட்டுப் பிரஜையொருவரையும், வலான வைத்தியசாலையில் அனுமதித்த போது காரின் சாரதி உயிரிழந்துள்ளார். 

மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய  புபுரண என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம், வலான வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .