2025 ஜூன் 11, புதன்கிழமை

கங்கொட்டாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, அரும்பொருட் காட்சிசாலையில், தொல்பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கங்கெட்டா என்று அழைக்கப்படும் பிரியந்த மெண்டிஸ் என்பவரின் விளக்கமறியல், எதிர்வரும் 19ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவின் பேரிலேயே, விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு நடந்த இந்தத் திருட்டு சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கவில்லை என்று, நீதிமன்றத்தின் கவனத்துக்கு பொலிஸார் கொண்டுவந்தனர்.

இதன் காரணமாக சந்தேகநபரை நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக, மன்றின் கவனத்துக்கு பொலிஸார் கொண்டுவந்தனர்.

எவ்வாறாயினும் இந்த கொள்ளை சம்பவத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டு, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் 6 பேர், பிணையில் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், பெரும் பரப்பரப்பாக பேசப்பட்ட,  அரும்பொருட் காட்சிசாலை திருட்டு சம்பவத்துடன் அன்றைய ஆட்சியாளர்களுக்கு தொடர்பிருப்பதாக அப்போது பரவலாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10