2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கடைத்தொகுதி தீக்கிரை

Princiya Dixci   / 2016 ஜனவரி 27 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மித்தெனிய, வலஸ்முல்லப் பகுதியிலுள்ள ஆடைக் கடைத்தொகுதி, நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு 12.30க்கு தீக்கிரையாகியுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ விபத்தினால் சுமார் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதோடு, அருகில் இருந்த மின் கம்பங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மித்தெனிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து மித்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X