2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கடனட்டை- தங்க நகை அடகுக்கான வட்டிவீதம் குறைப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடனட்டை (கிரடிட் கார்ட்), தங்க நகை அடகு என்பவற்றுக்கு அறவிடப்படும் வட்டிவீதத்தைக் குறைப்பதற்கு, இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, கடனட்டைகளில் அறவிடப்படும் அதிகபட்ச வட்டி விகிதம் நூற்றுக்கு 18 சதவீதம் வரையிலும் தங்க நகை அடகுக்காக அறவிடப்படும் அதிகபட்ச வட்டி வீதம் நூற்றுக்கு 10சதவீதம் வரையிலும் குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .