2024 மே 04, சனிக்கிழமை

கடும் மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கவும்

Simrith   / 2024 ஏப்ரல் 23 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பொழியும் எனவும் மக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சமீபத்திய முன்னறிவிப்புகளின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பனிமூட்டமான நிலையும் எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .