2025 ஜூன் 07, சனிக்கிழமை

கடலோர ரயில் ஓட்டுநர்கள் நண்பகலுடன் விலக முடிவு

Editorial   / 2025 ஜூன் 06 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கடலோர ரயில் பாதையில் இன்று (06) நண்பகல் 12 மணி முதல் ரயில் ஓட்டுநர்கள் குழு ஒன்று ரயில் சேவைகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் டிரைவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான ரயில் சமிக்ஞை கோளாறை சரிசெய்யத் தவறியதே இந்த விலகலுக்கான காரணம் என்று லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்ஸ் டிரைவர்கள் சங்க செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்தார்.

இது தொடர்பாக ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினரிடையே சிறப்பு கலந்துரையாடல் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .