Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜூன் 01 , பி.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கின்ற மூன்று மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை (01) மதியம் ஒரு மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு சென்றுள்ளனர்.
மூவரும் கேணியில் இருந்தபோது இருவர் நீரில் இறங்கி இருக்க மற்றவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
திடீரென இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் மற்றைய யுவதி அவர்களை காப்பாற்ற முயன்று அது பயனற்றுப் போக குறித்த யுவதி அயலவர்களை அழைத்து அவர்களை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் பத்தில் கல்வி கற்கின்ற 15 வயதான ச.ரஸ்மிலா மற்றும் ர.கிருசிகா ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago