2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாந்தோட்டை லுனுகம்வெஹர பகுதியில் உள்ள கடையொன்றிற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த கொலை சம்பவம் இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

லுனுகம்வெஹர பகுதியைச் சேர்ந்த கெலும் துஷார ஹேவத் இப்பா என்ற 32 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துளார்.

அதே பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபருக்கும் இவருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .