2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கராப்பிட்டியவில் 1,291 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள்

Editorial   / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


காலி- கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை 1,291 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுள் 20 பேருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்துள்ளார்.


அத்துடன் குறித்த வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நாளொன்றுக்கு 150 தொடக்கம் 200 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X