2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

’கருங்கல்லை நொருக்கிவிட்டோம்’

Editorial   / 2020 ஜூலை 18 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கம் உலக நாடுகளின் அனைத்தினதும் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்ட ஆட்சியாகவே இருந்ததென தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் உதய கம்மன்பில, கருங்கல்லை போல பலமாக இருந்த ஆட்சியை உடைத்தெறிந்துவிட்டோம் என்றார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிக​ழ்வொன்றில் கலந்துகொண்டு ​மேலும் கருத்துரைத்த அவர்,

இதேபோன்றதொரு தினமான 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதியன்றே நல்லாட்சிக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்திருந்தாகவும்,  அப்போது நல்லாட்சி அரசாங்கம் சகல நாடுகளினதும் ஆதரவரை பெற்றுக்கொண்ட ஒரு கருங்கல்லை போல உறுதியாகவே இருந்ததெனவும் தெரிவித்தார். 

உலக நாடுகளிடத்திலும், உள்நாட்டில் நாடாளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளினதும் விருப்பத்தை பெற்றுக்கொண்ட​தொர ஆட்சியை எதிர்க்கும் செயற்பாட்டை கருங்கல்லில் தலையை மோதும் செயற்பா​டனவே பலரும் கண்டதாக தெரிவித்த அவர், இன்று தலையால் மோதியே கருங்கல்லை நொருக்கிவிட்டோம் என்றார். 

மேற்படி, செயற்பாட்டின் விளைவாக நாட்டுப் பற்று கொண்ட ஒரு அரசாங்கம் உருவாகியுள்ளதெனவும் தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .