2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கற்றுக்கொண்டப் பாடங்களை எதிர்காலத்துக்கு விட்டுச் செல்லாதிருப்போம்

Editorial   / 2019 மே 14 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த காலங்களில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை எதிர்கால சந்ததியினருக்கு விட்டு வைக்க வேண்டாம் என சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எமக்கென்ற ஒரு நாடாக விளங்குவது இச்சிறிய நாடு மாத்திரமே. வன்முறைகளால் இந்நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டால், இலங்கையர்களாக எமக்கே அது பலவீனமாகும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று இலங்கையின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பிலேயே சனத் ஜயசூரிய இவ்வாறு ​தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக பல்வேறு வன்முறைகளுக்கு முகங்கொடுத்து, அதன் ஊடாக படிப்பினைகளைப் பெற்றுக்கொண்ட நாம், எமது எதிர்கால சந்ததியினருக்கு இந்த மோசமான அனுபவங்களை வழங்காதிருப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .