2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

களுவாஞ்சிகுடியில் நினைவு தினம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 26 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி 
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில், சுhனாமியினால் உயிரிழந்தவர்களுக்கு இன்று (26) காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகத்தின் ஏற்பட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், சுனாமியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மண்முனை தென்எருவிப் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு  அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் அக்கட்சியின் உபதலைவருமான என். நகுலோஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது களுவாஞ்சிகுடி கடற்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி, அகவணக்கம் செய்து உயிரிழந்தவர்கள் நினைவு கூரப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X