2025 ஜூன் 19, வியாழக்கிழமை

’கள்வர்களை பிடிப்பதில் கடந்த அரசாங்கம் தோல்வி’

Editorial   / 2020 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கள்வர்களை பிடிப்பதில் கடந்த அரசாங்கம் தோல்வியடைந்ததாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (21) முற்பகல் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாட்டை அபிவிருத்தி செய்து கட்டியெழுப்பியதில் தமது அரசாங்கம் வெற்றிக் கண்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், பாதுகாப்பு தோல்வியடைந்தமைக்கு தம்மால் பொறுப்பு சொல்ல முடியாது என்றும் ஏனெனில், பாதுகாப்புக்குரிய சகல அதிகாரங்களையும் முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவே தம்வசம் வைத்திருந்ததாகவும் அவர் குறிபிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .