2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கொழும்பில் பசுமை சித்தர்

Editorial   / 2025 ஜூன் 27 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் பசுமை சித்தர்  இலங்கை வந்துள்ளார்.  முருகப் பெருமான் திருவருளுக்கு பாத்திரமான பசுமை சித்தர்,  கதிர்காம மகோற்சவத்தில்  கலந்து கொண்டு அடியார்களுக்கு அருள் ஆசி வழங்கவுள்ளார். 

 இதற்கான ஏற்பாடுகளை சித்தரின் பக்தரான பிரதீப் செய்துள்ளார்.  கொழும்பில் உள்ள  ஆலயங்களுக்கும் விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வார். 

மயூராபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஜூலை மாதம் 6ஆம்  திகதி  நடைபெறும் தமிழ் பண்பாடு அனைத்துலக மாநாட்டில் கலந்து கொண்டு ஆசியுரை வழங்குவார்.

கலை ஒளி முத்தையா பிள்ளை அறக்கட்டளை சார்பில் எச்  எச். விக்ரமசிங்க பதிப்பித்து பேராசான்   மு. நித்தியானந்தன் அணிந்துரையுடன்  வெளிவந்த மாத்தளை எஸ். மரதன் கிருஷ்ணன் எழுதிய 'இன்னுமொரு குறிஞ்சிப்பூ" நூலையும்  வெளியிட்டு வைக்கின்றார்.

இந்த நிகழ்வில் தமிழகத்திலிருந்து 40 பேராளர்களும் லண்டன், சுவிஸ், பிரான்ஸ், மற்றும் தென்    ஆப்பிரிக்கா போன்ற சர்வதேச நாடுகளில் இருந்தும் பேராளர்கள் கலந்து கொள்கின்றார்கள் மயூராபதி ஆலய அறங்காவலர் பி சுந்தரலிங்கம்  தலைமையில் நடைபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .