2025 ஜூன் 18, புதன்கிழமை

கழுத்தில் கைவைத்த கணவன் - மனைவி கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

நல்லூர் உற்சவத்தின் தீர்த்த திருவிழாவான இன்று (18) தங்கச் சங்கிலி திருட்டு ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த கணவன் மனைவி  யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த உற்சவம் இன்று இடம்பெற்றது. உற்சவத்தில் நல்லூர் கந்தன் தீர்த்தக்கேணியில் தீர்த்தமாடி கொண்டிருந்த போது அங்கிருந்த பக்தர்களிடம் தங்கச் சங்கிலி திருட்டு ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு தங்கச் சங்கிலிகளை மீட்டுள்ளதாக யாழ்ப்பணாம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த கணவன் மனைவி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து தங்கச் சங்கிலியை மீட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .