2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘கஸகஸ்தான், தஜகிஸ்தானிலிருந்து மாத்திரமே அழைப்பு விடுக்கப்படுகின்றது’

Editorial   / 2019 ஜூன் 25 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது கஸகஸ்தான், தஜகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து மட்டுமே ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் இலங்கைக்கு வருகைத் தந்தவர்கள் மிகவும் மோசமான அரசியல் தலைவர்களைப் போலவே 32 மனைவிகளையுடைய அரச தலைவர்களும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ராஜித, இந்த நிலைமை தற்போதைய தலைவராலும் உருவாக்கப்பட்டுள்ளதென்று தெரிவித்துள்ளார்.

ஜீ-7 மாநாட்டில் உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியுள்ள கௌரவத்தை, அவரால் பாதுகாக்க முடியாமல் போயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .