Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 ஜூன் 17 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் வெகுஜன ஊடக, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண்ணை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி செவ்வாய்க்கிழமை (17) உத்தரவிட்டார்.
2021 மற்றும் 2024 க்கு இடையில் முன்னாள் வெகுஜன ஊடக, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பணியாளர்களாக 15 ஊழியர்களை நியமித்ததாகக் கூறப்படும் மோசடி மற்றும் அரசாங்கத்தால் அந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் இந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த ராஜபக்ஷ சுகைங் பத்திரனகே நிபுனி கிருஷ்ணஜினா பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தலா 1 மில்லியன் ரூபாய் இரண்டு தனிப்பட்ட பிணைகளை விதித்த நீதவான், சந்தேக நபர் வெளிநாடு செல்ல தடை விதிக்கவும், பிணைதாரர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
சுகாதார அமைச்சுக்கு பெயரளவு நியமனங்களை வழங்குவதன் மூலம் அரசாங்க சம்பளம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஆணைக்குழு தற்போது நடத்தி வரும் விசாரணையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஊழியர் மீதான விசாரணை முடிவடைந்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago