Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 16 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரட்டுவை – பொல்கொட கங்கையில் படகொன்று கவிழ்ந்ததில் இளைஞரொருவர் காணாமற்போயுள்ளமை தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (15) இரவு 7 மணியளவில் காணாமற்போன குறித்த இளைஞரை தேடும் பணிகள், கடற்படையினரின் உதவியுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், எனினும் எந்தவிதமான தகவல்களும் இதுவரையில் கிடைக்கவில்லையெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த படகில் மூவர் பயணஞ்செய்த நிலையில், இருவர் நீந்தி கரையொதுங்கியுள்ளதுடன், மற்றைய இளைஞரே காணாமற்போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago