2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் மாபெரும் ஊர்வலம் இன்று

Simrith   / 2024 பெப்ரவரி 20 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவினர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள ஏழாண்டு கால உண்மையைத் தேடும் வேதனையை நிறைவு செய்யும் வகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்று காலை கிளிநொச்சியில் பாரிய ஊர்வலமொன்றை நடத்தவுள்ளனர். .

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கத்தின் (ARED) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஐந்து கிளைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கிளிநொச்சியில் தங்களின் குறைகளைக் குறிக்கும் வகையில் பேரணியாகச் செல்லவுள்ளனர்.

கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து காலை 9.30 மணியளவில் பிரதான ஊர்வலம் ஆரம்பமாகி நான்கு கிலோமீற்றர் தூரத்தில் டிப்போ சந்தியில் உள்ள சிறப்பு நினைவுச்சின்னம் வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக ARED இன் பேச்சாளர் டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த ARED வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், குறிப்பாக விதவைத் தாய்மார்களும் ஏழாவது ஆண்டு நினைவேந்தலில் கிளிநொச்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நினைவேந்தலுக்கு வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

ARED ஆதாரங்களின்படி, 2009 ஆம் ஆண்டு போரின் பிற்பகுதியில் 200,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X