2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கால்வாய்க்கு அருகில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு

Editorial   / 2019 மே 04 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மலேரியா கால்வாய்க்கு அருகில் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புத்தளம் - மலேரியா கால்வாய்க்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான பையொன்று கிடப்பதாக, தனக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து , அங்கு சென்று குறித்த பையை சோதனை செய்த போதே, ரி 56 ரக துப்பாக்கி ஒன்று இருந்துள்ளமை  கண்டுபிடிக்கப்பட்டதாக, புத்தளம் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன, நேற்று (03) தெரிவித்தார்.

இதனையடுத்து, அந்த கால்வாய்க்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மற்றுமொரு ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது.

குறித்த இரண்டு துப்பாக்கிகளும் தனித்தனியாக கறுப்பு நிறத்திலான பொலிதீன் உறைப் பைகளில் போடப்பட்ட நிலையில் இனந்தெரியாதோரால் மலேரியா கால்வாய்க்கு அருகில் வீசப்பட்டிருக்கலாம் எனவும் அவர் ௯றினார்.

அண்மையில், இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, நாடு பூராகவும் விஷேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சட்டவிரோதமாக குறித்த துப்பாக்கிகளை வைத்திருந்த நபர்களே, சோதனைகளுக்கு அச்சமடைந்து இவ்வாறு வீசியிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .