2024 மே 04, சனிக்கிழமை

கிராமம் தாண்டி ஓடிய மாணவன் மரணம்

Editorial   / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்-சிங்கள புத்தாண்டு விழாவிற்காக கடந்த 21ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட கிராமம் தாண்டிய (மரதன்) ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டிருந்த 17 வயதுடைய விளையாட்டு வீரர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக கிரியுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார். இவர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவன் ஆவார்.

  சனசமூக மண்டபத்திற்கு அருகாமையில்   காலை ஆரம்பமான மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட இம்மாணவன் சுமார் 500 மீற்றர் தூரத்தில் வீதியில் விழுந்து அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்ததாக புத்தாண்டு விழாவை காண சென்ற சிலர் தெரிவித்தனர்.  ஓ​டிக்கொண்டிருந்த போது மயக்கமடைந்து விழுந்துள்ளதாக அறியமுடிகின்றது.

மரதன் ஓட்ட போட்டியின் போது அப்பகுதியில் வெயில் அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .