2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிரிபத்​கொடையில் திடீர் தீ விபத்து

Editorial   / 2019 மே 07 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரியவடி வீதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் வர்த்தக நிலையமொன்றில் நேற்று (06) இரவு 10.40 மணிக்கு தீ விபத்தொன்று ஏற்பட்டது.

தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை உடனடியாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

குறித்த தீ விபத்தின் காரணமாக அருகிலிருந்த இரு கடைகளுக்கும் பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .