2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

Freelancer   / 2022 மே 17 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ்  கடவுச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சேவையினை பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு மேற்கொள்வது கட்டாயமாகுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதன்படி,  immigration.gov.lk  எனும் இணையத்தள முகவரிக்கு பிரவேசித்தல் அல்லது 0707 101 060 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்துவதன் மூலம் முன்பதிவுகளை மேற்கொள்ள முடியுமென குறிப்பிட்டப்பட்டுள்ளது.  

நாளாந்தம் 2 ஆயிரம் கடவுச் சீட்டுகளை மாத்திரம் வழங்குவதற்கான திறனை திணைக்களம் கொண்டிருப்பதன் காரணமாக அவசியமற்ற சிரமங்களை தவிர்க்கும் வகையில் முன்பதிவினை மேற்கொள்வது கட்டாயமாகுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .