2025 ஜூன் 09, திங்கட்கிழமை

’’குடு சலிந்து’’வுக்கு பிடியாணை உத்தரவு

Freelancer   / 2024 டிசெம்பர் 23 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணையில் விடுவிக்கப்பட்ட "குடு சலிந்து" என அழைக்கப்படும் சலிது மல்ஷிக குணரத்னவை கைது செய்யுமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு குடு சலிந்துவுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

ஆனால் அவர் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (23) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.  

குறித்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதவான் நீதிமன்றம் குடு சலிந்துவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .