2025 ஜூன் 28, சனிக்கிழமை

குண்டுத் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பலியானொரின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் பல வைத்தியசாலைகளில், குண்டுத்தாக்குதலில் காயமடைந்த 500  பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர் எனவும், குறித்த அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றவந்த இரவர் நேற்று (22) இ​ரவு உயிரிழந்துள்ளனர் என, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .