2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

குருநாகல் போதனா வைத்தியசாலையில் வெற்றிகர அறுவை சிகிச்சை

Editorial   / 2019 ஜூலை 04 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததாக, வைத்தியசாலையின் பணிப்பாளரும் வைத்திய அதிகாரியுமான சரத் வீரபண்டார தெரிவித்தார்.

இன்று (04) குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் குழாமுடன்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மூளை செயலிழந்த பிள்ளையொன்றின் சிறுநீரகங்களைப் பெற்று, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நபரொருவருக்குப் பொருத்தியுள்ளதாகத் தெரிவித்ததுடன், தமது இந்த அறுவை மாற்று சிகிச்சை வெற்றியளித்தமைக்கு வைத்தியசாலையின் சகல வைத்தியர்களதும், தாதிமார்களதும் பங்களிப்பு பிரதான  காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .