2025 ஜூன் 18, புதன்கிழமை

குருநாகல் மேயர் உள்ளிட்ட ஐவர் வெளிநாடு செல்ல தடை

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் மேயர் உட்பட 5 பேர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்ப்பு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகரசபை தலைவர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட 5 பேரை  கைதுசெய்ய பிடியாணையைப் பெற்றுகொள்ளுமாறு அண்மையில் சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருப்பு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து அவர்களுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த பிடியாணை உத்தரவு இன்றுடன் நிறைவடையும் நிலையில், அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் மீண்டும் பிடியாணை உத்தரவை இன்று(10) பிறப்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .