2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குர்ஆன் படிக்க ஆசைப்பட்ட பிக்கு பிரச்சினையில் சிக்கினார்

Editorial   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம தஹம் மாவத்தையில் குர்ஆன் ஒன்றை தம்வசம் வைத்திருந்த பிக்கு ஒருவரை பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

பிக்குவிடம் காணப்பட்ட சிங்கள மொழியிலான குர்ஆன் கீழே விழுந்​தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த பிக்கு அமைதியற்ற முறையில் நடந்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து பிக்குவை பொலிஸாரிடம் பிரதேசவாசிகள் ஒப்படைத்தப் பின்னர், பிக்குவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் கண்டியிலுள்ள விகாரையில் இருப்பதாகவும், குர்ஆன் பற்றி ஆய்வு செய்வதற்காக இதனை சிங்கள மொழியில் தான் வைத்திருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பிக்குவை பொலிஸார் விடுவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .