2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி

J.A. George   / 2024 மார்ச் 26 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் மே மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"கடந்த ஆண்டு, 28 லட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கினோம். அதேபோல், 28 இலட்சம் குடும்பங்களுக்கு தலா பத்து கிலோகிராம் என இரண்டு தடவைகள் அரிசி வழங்கவுள்ளோம்.

ஏப்ரல் மாதம் புத்தாண்டுக்கு முன் 10 கிலோகிராம் அரிசி வழங்கப்படுவதுடன், மே மாதம் முதல் வாரத்தில் 10 கிலோகிராம் அரிசி வழங்கப்படும்.

இதேவேளை, அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X