2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

குற்றத்தை ஒப்புக்கொண்டார் ரயன்

Editorial   / 2019 ஏப்ரல் 05 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் கோஷ்டித் தலைவரான மாகந்துரே மதுஷுடன், டுபாயில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ரயன் வென்ரோய் உள்ளிட்ட மேலும் நான்கு சந்தேகநபர்கள், நேற்றைய தினம் (04) டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், 18 மணிநேர விசாரணைகளைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவதற்காக, வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவரோடு நாடு கடத்தப்பட்ட ஏனைய நால்வரும் விசாரணைகளின் பின்னர், இன்றைய தினம் (05) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தன்னுடைய தனிப்பட்ட பாவனைக்காக, தான், கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாக, நடிகர் ரயன், வெலிகம பொலிஸாரிடம், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

டுபாயில் ​அவர் கைதுசெய்யப்பட்டிருந்த போது, இலங்கையிலிருக்கும் அவரது வீட்டை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்ட போது, அதிலிருந்து, கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு இருந்தது. இந்த கார், மாத்தறை - மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து, அங்குள்ள பிரபல பாதாள உலகக் கோஷ்டி நபரான “சன்ஷைன் சுத்தா” என்பவருக்குச் சொந்தமான ஹோட்டலில் வைத்தே, கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .