2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குவைத்தில் துன்புறுத்தல்களுக்கு ஆளான 57 பெண்கள் நாடு திரும்பினர்

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.​கே.ஜி.கபில

பணிப்பெண்களாக குவைத் நாட்டுக்குச் சென்று, அங்குள்ள வீட்டு எஜமான்களால், பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளான, இலங்கைப் பணிப்பெண்கள் 57 பேர், இன்று அதிகாலை (29) இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குவைத்தில் பணியாற்றிய காலத்தில், வீட்டு எஜமான்களின் துப்புறுத்தல்கள் மற்றும் இம்சைகளை பொறுத்துக்கொள்ளமுடியாது, அவர்கள் பணியாற்றிய இடங்களில் இருந்து தப்பிச்சென்றவர்களை, அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்து, அங்குள்ள இலங்கைத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

 இந்நிலையில், குவைத்திலுள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த குறித்த 57 பேரும், நாட்டுக்கு  அழைத்துவரப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .