Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஜூன் 01 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
ஆனமடுவ - சிலாபம் வீதியின் ரதஒலாஓயா பாலத்துக்கு அருகில் நேற்று (31) மாலை, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை கண்டெடுத்துள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாலத்துக்கு அருகே உள்ள பற்றைக்குள் சந்தேகத்துக்கு இடமான பொருள் ஒன்று கிடப்பதாக நபர் ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் போத்தல் ஒன்றில் அடைக்கப்பட்ட கைக்குண்டை மீட்டுள்ளனர்.
SHG 87 வகையைச் சேர்ந்த குறித்த கைக்குண்டு, வெடிக்கக் ௯டிய நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைது செய்யப்பட்டவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago