2025 ஜூன் 19, வியாழக்கிழமை

’ ​கைதிகளுக்கு சொகுசு அறைகளை வழங்க சம்பாயோ பணம் அறவிட்டுள்ளார்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அநுருத்த சம்பாயோவால் கைதிகளுக்கு, சுகபோக அறைகளை  சிறைக் கூடங்களில் ஒதுக்குவதற்காக, 10,000 ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாய் வரை பணம் அறவிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மேலதிக சொலிஸிட்டர் நாயகம் திலீப பீரிஸ் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.


கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை முன்னாள் அதிகாரி அநுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வர், கடந்த வெள்ளிக்கிழமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, சொலிஸிட்டர் நாயகம்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அத்துடன் நீர்கொழும்பு சிறைச்சாலையின் சில கூடங்கள் ஹோட்டல் அறைகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள இந்த அறைகள், போதைப் பொருள் உள்ளிட்ட ஏனைய குற்றச்செயல்களில் ஈடுபட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில்  இடம்பெறுவதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அரசாங்கத்தின் மேலதிக சொலிஸிட்டர் நாயகம் திலீப பீரிஸ் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .