2025 ஜூன் 28, சனிக்கிழமை

கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள் சோதனை

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வசந்த சந்திரபால

அம்பாறை நகரில் கைவிடப்பட்டிருந்த நிலையில், வீதியில் கிடந்த  மோட்டார் சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து, வீதியை மூட நடவடிக்கை எடுத்ததன் பின்னர், சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததன் பின்னர், குறித்த மோட்டார் சைக்கிளில் வெடிப்பொருட்கள் எவையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, குறித்த இடத்துக்கு வருகைத்தந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், கல்முனை பகுதிக்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், அதிகாலை வேளை மழை பெய்ததன் காரணமாக, மோட்டார் சைக்கிளை கைவிட்டுச் சென்றதாகவும், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தையடுத்து, நகர் பகுதிகளில் இவ்வாறு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்துவிட்டுச் செல்ல வேண்டாம் என, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்டிருந்த பீதியால் நகரில் இருந்த பலர் பெரும் பதற்றத்துக்கு உள்ளாகியுள்ள அதேவேளை, வர்த்தக நிலையங்களும் திறப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .