2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கொக்கேய்னுடன் வெளிநாட்டவர் உட்பட மூவர் கைது

Editorial   / 2019 மார்ச் 03 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிசை – பேக்கரி சந்தி பிரதேசத்தில் கொக்கேய்னுடன் வெளிநாட்டவர்கள் இருவருடன் மற்றுமொரு நபரும் பொலிஸாரால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

32 கிராம் அளவிலான கொக்கேய்னை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேகநபர்களில் ​​நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவர் உள்ளடங்குவதுடன், மற்றைய சந்தேகநபர் மொரட்டுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸாரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .