2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கொடிகாமம் வீதியில் கஞ்சா மீட்பு

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம் றொசாந்த் 

நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் இடமாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா, சிறப்பு அதிரடிப் படையினரால், இன்று நண்பகல் மீட்கப்பட்டது.

எனினும், சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

அரச புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படையினரால், இந்த கஞ்சா மீட்கப்பட்டது.

6 சாக்குகளில் பொதியிடப்பட்டிருந்த இந்தக் கஞ்சா பொதிகள், வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள், மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .