Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஜூலை 13 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் தப்பியோடியுள்ளார் என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்ஹேன்கம, ஹேவாஹின்ன, அவிசாவளை என்ற முகவரியில் வசிக்கும் நந்தசிறி போவத்த என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
சபரகமுவ பல்கலைக்கழகத்திலுள்ள சிங்கராஜ இடைத்தங்கல் கொவிட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு இன்றைதினம் மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே அவர், வைத்தியசாலையிலிருந்து தப்பியுள்ளார் என வைத்தியசாலைப் பொலிஸாரால் பலாங்கொடை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தப்பிய நோயாளி தொடர்பான விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago