2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கொரோனா மரணங்கள் போலி தகவல் பரப்பியவர் கைது

J.A. George   / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா மரணங்கள் தொடர்பான போலியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் தொடர்பான படங்களை இலங்கையில் நிகழ்ந்த மரணங்கள் என போலியான தகவல்களை அவர் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

களுபோவில வைத்தியசாலையில் கொரோனா மரணங்களினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் அவர் தவறான தகவல்களை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுகொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X