2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

கொரோனா மரணம் 181 ஆக உயர்வு

S. Shivany   / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனரென, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது. 

வெலிக்கடை சிறைக் கைதியான 68 வயதுடைய நபரும், கொழும்பு 15 ஐச் சேர்ந்த ஆண் ஒருவரும், தர்காநகர் பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், மக்கொன பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணும், கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X