R.Maheshwary / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடுபூராகவும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் வகை என்ன என்பது குறித்து புதிய பரிசோதனைகளை ஆரம்பிக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோய்எதிர்ப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதென அதன் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றை, சாதாரண பிசிஆர் பரிசோதனைகள் மூலம் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், குறித்த புதிய பரிசோதனை ஆரம்பிக்கப்படவுளதொகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அமெரிக்கா, பிரித்தானியா, தென் ஆபிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றா, இலங்கையில் பரவுகின்றது என்பது குறித்து புதிய பரிசோதனை மூலம் அறிந்துக்கொள்ளலாம் என்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
4 minute ago
46 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
46 minute ago
46 minute ago
2 hours ago