2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

’கொரோனாவுக்கு மீண்டும் இடமளிக்க வேண்டாம்’

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவனயீனமாக செயற்பட்டால் இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கக்கூடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

“உலகின் அனைத்து நாடுகளும் நோய் தொற்றினால் அவதியுறும் நிலையில், எமது நாடு நம் அனைவரினதும் ஒன்றிணைந்த முயற்சியினால் குறிப்பிடத்தக்க வகையில் இந்தப் போராட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.

இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் தொற்றானது முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டும். கவனயீனமான செயற்பாடுகள் நோய்த்தொற்றை மீண்டும் பரப்பக் கூடும். 

எனவே, சுகாதார துறை மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை முற்றாக பின்பற்றுமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் வேண்டிக்கொள்கின்றேன்” என ஜனாதிபதி தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X