2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பிலிருந்து பதுளைக்கு​ புதிய ரயில்

Kamal   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருட இறுதிக்குள் கொழும்பு - பதுளைக்கு இடையில் தெனுவர மெனிகே என்ற பெயரில் நகரங்களுக்கிடையிலான புகையிரத சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரித்த காரண்தாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் எஞ்சின்களை கொண்டு குறித்த ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், முதல் நாள் கொழும்லிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குறித்த புகையிரம் மறுதினமே பதுளையிலிருந்து  கொழும்புக்கு திரும்பும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த ரயில் 8 பெட்டிகளை கொண்டுள்ளதுடன், அவற்றில் சொகுசு ஆசனங்கள் அடங்கியவையாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X