2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் 15 மணித்தியால நீர் வெட்டு

Editorial   / 2020 ஜூன் 14 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (14) 15 மணித்தியால நீர்வெட்டு அமலாகுமென, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று காலை 9.00 மணி தொடக்கம் இரவு 12 மணிவரை கொழும்பு 02, 03, 07, 08 மற்றும் கொழும்பு 10 ஆகிய பிரதேசங்களில், நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென,  தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், மேற்குறிப்பிட்ட நேரத்தில் கொழும்பு 01 பகுதிகளில், குறைந்தளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுமென, சபை அறிவித்துள்ளது.  

கொழும்பு நகரில் நீர் குழாய் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதன் காரணமாக, நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .