2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கொஸ்வத்தையில் 31 பேர் கைது

Editorial   / 2019 மே 15 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில், இன்று காலை வரை 31 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மைத் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையினைப் பெற்றுக்கொள்வதற்காக, வென்னப்புவ பொலிஸ் அதிகாரி, சிலாபம் உப பொலிஸ் அதிகாரி அடங்களாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழு முன்னெடுத்த விசாரணைகளுக்கமையவே, இச் சந்தேகநபர்கள் 31 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கொஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மையால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .